×

பாஜவை சேர்ந்த கல்யாணராமன் மீது கமிஷனரிடம் புகார்

சென்னை: இந்திய தேசிய லீக் கட்சியினர் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து, அக்கட்சியின் மாநில செயலாளர் ஷாகீர்கான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் அமைதி மாநிலமாக உள்ளது. அதை கெடுக்கும் வகையில் பாஜவை சேர்ந்த கல்யாணராமன் தனது முகநூலில் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் குறித்து தவறான பதிவுகளை செய்து வருகிறார். எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர் மீது பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்து விட்டு, நேற்று இரவு முகநூலில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் சிறைச்சாலைக்கு செல்வது எனக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆனால் தொடர்ந்து முகநூலில் பதிவு செய்வேன் என்று பதிவு செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Kalyanaraman ,Bhajan , BJP, Kalyanaraman, Commissioner, Complaint
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...