காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ேநற்று முன்தினம் நள்ளிரவு காகி சாபேத் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 4 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 30 போலீசார் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டனர். அரசுப் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள், ஆயுதங்கள், வெடிகுண்டுகளை தூக்கிச் சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி