சென்னை: வேதாரண்யம்-நாகை இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் கஜா புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து 80 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வேதாரண்யத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி