தூத்துக்குடி: கஜா புயலால் தூத்துக்குடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார். மேலும் கடலில் உள்ள மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகலுக்குள் மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி