×

தலையை துண்டித்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு மனநல சிகிச்சை

சேலம்:  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி கடந்த மாதம் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் கைது  செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.இந்நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருகிறார். எனவே அவர் நடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவருக்கு மனநல சிகிச்சை  அளிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து கொலையாளி தினேஷ்குமாரை  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று அழைத்து ெசன்றனர். பின்னர் அவருக்கு  மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ராங் அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநல மருத்துவர்கள் தினேஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cut , kill ,girl Mental health, treatment ,young people
× RELATED யானை தாக்கி விவசாயி பலி