×

கும்பகோணத்தில் காவிரி ரத யாத்திரைக்கு வரவேற்பு

கும்பகோணம்: கும்பகோணத்துக்கு வந்த காவிரி ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காவிரி படித்துறையில் அன்னை காவிரிக்கு ஆரத்தி நடந்தது. நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருத்தல், பராமரித்து பாதுகாத்தல் உள்ளிட்டவை வலியுறுத்தி அகில பாரத துறவியர் சங்கம், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தலை காவிரியில் துவங்கி பூம்புகார் வரை காவிரி ரத யாத்திரை நடக்கிறது.

கும்பகோணத்துக்கு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று வந்தது. காவிரி ரதத்துடன் வந்த அகில பாரத துறவியர் சங்க தலைவர் ராமானந்தாசுவாமி, ஒருங்கிணைப்பாளர் வேதானந்தா சுவாமி மற்றும் துறவிகளை கொட்டையூர் பைபாஸ் சாலையில் மாசிமக ஆரத்தி பெருவிழா மற்றும் தென்பாரத கும்ப மேளா மகாமகம் அறக்கட்டளை தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றனர். பின்னர் ரதத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் காவிரி படித்துறையில் அன்னை காவிரிக்கு ஆரத்தி நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauvery Rath Yatra ,Kumbakonam , Kumbakonam, Cauvery, pilgrimage
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...