×

காரியாபட்டியில் மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல்

காரியாபட்டி: காரியாபட்டியில் மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், நகரில் பீதி ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காரியாபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த ஜோசப் (62) என்பவருக்கு தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகாததால், அவரை பரிசோதனை செய்தனர். இதில், அவருக்கு பன்றிகாய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால், காரியாபட்டியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், ஜோசப் வீட்டை சுற்றி வட்டார மருத்துவ அலுவலர் ரூபன்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமனியன், சுகாதார ஆய்வாளர் கருப்பையா, சின்னச்சாமி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குருவிராஜா மற்றும் சுகாதார பனியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kariapatti , Kariyapatti, people,fever
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...