×

அதிமுக மாஜி கவுன்சிலர் ஆக்கிரமித்த நிலம் மீட்பு

துரைப்பாக்கம்: அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆக்கிரமித்த நிலம் மீட்கப்பட்டது. சென்னை மாநகராட்சி 15 வது மண்டலம் 196 வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் அரை கிரவுண்ட் நிலத்தை முன்னாள் அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக அப்பகுதி மக்கள் சோழிங்கநல்லூர் தாசில்தார் நிர்மலா தேவிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை சோழிங்க நல்லூர் தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, ஆக்கிரமிப்பு செய்த கட்டிடத்தை இடித்து தள்ளினர். மேலும், அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Land Reclamation ,AIADMK Maj ,Councilor , Land Reclamation, AIADMK, Councilor
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்