×

முக்கிய பிரமுகரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

சென்னை: செங்குன்றம், திருவள்ளுவர் நெடுஞ்சாலை, ஆலமரம் ஏரிக்கரை அருகில் 2 பேர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், செங்குன்றம், பாடியநல்லூர், காந்தி நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சேதுபதி (24), மற்றும் செங்குன்றம், காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) கட்டாரி ராஜேஷ் (26) என்பதும் தெரியவந்தது. இதில், சேதுபதி சோழவரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 3 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 18 வழக்குகள் உள்ளதும், 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது.
 
இதேபோல், ராஜேஷ் (எ) கட்டாரி ராஜேஷ் மீது சோழவரம், காட்டூர், செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஒரு கொலை வழக்கு, 5 கொலை முயற்சி வழக்கு உட்பட 17 வழக்குகள் உள்ளதும், செங்குன்றம் காவல் நிலையத்தில் மட்டும் 12 வழக்குகள் உள்ளதும், 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக வசித்து வந்ததும், செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்வதற்காக அங்கு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  

குற்றச்செயலில் ஈடுபட இருந்த குற்றவாளிகளை கைது செய்த புழல் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் சதிஷ்குமார், தலைமைக் காவலர் சௌந்தரராஜன்,  முதல்நிலைக் காவலர் நல்லுசாமி, காவலர் கிருஷ்ணமூர்த்தி, செங்குன்றம் காவல் நிலைய காவலர்கள் நள்ளன்கிள்ளி, மருதுபாண்டி மற்றும் அறிவழகன் ஆகியோரை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,murder , Two young men,armed,caught,murder,mainstream
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...