×

234 தொகுதி பொறுப்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிப்பு: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நடந்தது. இக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர். தியாகராஜன், எம்.எஸ். திரவியம் உள்ளிட்ட 37 மாவட்டத் தலைவர்கள், ஹசன் ஆருண். நாசே ஆர். ராஜேஷ் உள்ளிட்ட எட்டு அணிகளின் தலைவர்கள் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி : தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்திற்கு மார்ச் அல்லது ஏப்ரலில் ேதர்தல் நடத்தப்படலாம். இதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமர் ஆவார். 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும். ஈ.வி.ேக.எஸ் இளங்கோவன் பேசுவதை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால் எனக்கு அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. காங்கிரஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்திவருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Volunteers ,Thirunavukkar , 234 Volunteers, Thirunavukkarar
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...