×

பள்ளியில் உள்ள தாளாளர் அறையில் வைத்து 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக செயலாளருக்கு சரமாரி உதை

திருச்சி: பள்ளி தாளாளர் அறைக்கு 7 வயது மாணவிைய அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க செயலாளரை பள்ளி வளாகத்திலேயே பெற்றோர், மற்ற மாணவர்களின் பெற்றோர் அடித்து  உதைத்தனர். திருச்சி  ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது.  இந்த பள்ளியின் தாளாளராக மீரான் மைதீன் பணியாற்றினார். இவருக்கு உடல்  நலக்குறைவு ஏற்பட்டதால், பள்ளியின் செயலாளர்  சலீம்(50)  தாளாளர் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் சலீம் 49 ஏ வட்ட அதிமுக  செயலாளராகவும் உள்ளார். பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவி  ஒருவரை சலீம் தினமும்  பள்ளியில் உள்ள தனது அறைக்கு  அழைத்து சென்று பாலியல்  தொந்தரவு கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையும்  வழக்கம்போல் தனது அறையில் பாலியல் தொந்தரவு  செய்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது  தாயிடம் தெரிவித்து விட்டார்.  இதனால், ெபற்றோர் நேற்று  காலை பள்ளிக்கு ெசன்று, சலீமிடம் கேட்டனர். அப்போது  இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி சலீமை தாக்கினர். பெற்றோருடன் மற்ற மாணவர்களின் பெற்றோரும் சேர்ந்து சலீமை  உதைத்தனர்.  இதுபற்றி  தகவல் அறிந்ததும் தில்லைநகர் போலீசார் வந்து சலீமை காவல் நிலையத்துக்கு  அழைத்து சென்றனர். போலீசாருடன் பெற்றோர்  மற்றும் கிராமமக்கள் திரண்டனர். அப்போது, சலீமை பார்க்க மேற்கு சட்டமன்ற  தொகுதி அதிமுக பொறுப்பாளர்  எம்.ஆர்.ஆர்.முஸ்தபா வந்தார். அவரை கண்டித்து பெற்றோர்கள் கோஷம் எழுப்பினர். ` சலீமை  காப்பாற்ற அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர்.

இதற்கு போலீசார் துணை  போகக்கூடாது. சலீம்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இதற்கிடையே போலீஸ் உதவி கமிஷனர் ராமசந்திரன்,  இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சலீமிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,school ,newspaper , 7 year old student, sex and AIADMK secretary
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...