×

மயிலாடுதுறை, கடலூரை அதிர வைத்த பயங்கர வெடிசத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நேற்று சுமார் 40 கி.மீ. சுற்று வட்டாரத்தை அதிர வைக்கும்படி பயங்கர வெடிசத்தம் கேட்டது. மயிலாடுதுறையில் நேற்று காலை 8.25 மணியளவில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது. இந்த வெடிசத்தம் கோயில் திருவிழாவில் வைக்கப்படும் வேட்டு என்று சாதாரணமாக இருந்துள்ளனர். மேலும் நில நடுக்கம் வந்துவிட்டதாக ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. மயிலாடுதுறை, மங்கைநல்லூர், குத்தாலம், செம்பனார்கோவில், காரைக்கால், பூம்புகார், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளிலும் வெடிசத்தம் கேட்டுள்ளதாக தெரிவித்தனர்.மயிலாடுதுறை நகர் வழியாக ராணுவ போர் விமானம் ஒன்று அந்த நேரத்தில் பறந்துள்ளது. அந்த நேரத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள கோவங்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக உள்ள பெரிய குளத்தில் பொதுமக்கள் குளித்துக்கொண்டிருந்தபோது குளத்தில் வெடிகுண்டு சரமாரியாக விழுந்ததுபோல் இருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் குளத்திலிருந்து தண்ணீர் 20 அடி உயரத்திற்கு எழும்பியது. இதைக்கண்டவர்கள் பதறி குளத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் சென்று பதுங்கியுள்ளனர். நீண்டநேரத்திற்குப்பின் எதுவும் பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னரே வெளியில் வந்தது தெரிந்தது. இந்த சத்தம் ஓரிடத்தில் மட்டும் கேட்கவில்லை மாவட்டம் முழுவதும் 40 கிமீ சுற்று வட்டாரம் வரை கேட்டுள்ளது.இதுபற்றி, வருவாய் வட்டாட்சியர், ஆர்டிஓ மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோரை தொடர்புகொண்டு பொதுமக்கள் கேள்வி கேட்டவண்ணம் இருந்தனர். அப்போது, ‘‘தஞ்சையில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து போர் விமானங்கள் அடிக்கடி பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும். போர் விமானங்களில் ஏர்லாக் கிளியர் செய்வதற்காக காற்றை திறந்துவிடும்போது இவ்வாறு அதிர்வுடன் சத்தம் கேட்கும். தற்போது ஏற்பட்ட சத்தமும் அதைபோன்று ஒன்றுதான், இதனால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் விமானப்படை தரப்பில், ‘‘விமானம் சற்று தாழ்வாக பறந்ததால், மக்களுக்கு அதிகளவில் சத்தம் கேட்டுள்ளது’’ எனவும் கூறப்பட்டது. இதேபோல், காலை 8.30 மணியளவில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கேட்டது. ஒரு சில இடங்களில் மாடி வீடுகள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்….

The post மயிலாடுதுறை, கடலூரை அதிர வைத்த பயங்கர வெடிசத்தம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudurai, Cuddalore ,Mayiladuthuram ,Mayiladuthur ,Mayeladu ,Mayiladuthura ,
× RELATED மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில்...