சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, நிறுவன நாளான நவம்பர் 11ம் தேதி நிறுவனர்களை நினைவுகூர்ந்து, மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, வங்கியின் பெரம்பூர் கிளையில் இலவச சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த ஆலோசனை முகாம் நடந்தது. இன்று 10ம் தேதி வண்ணாரப்பேட்டை கிளையில் இலவச ரத்த தான முகாம் நடைபெறுகிறது. நாளை (11ம் தேதி) மாலை 6 மணியளவில் சிறப்பு கடன் வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆலோசனை முகாம், சென்னை மண்டல மேலாளர் என்.நரேந்திரன் முன்னிலையில் நடக்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி