×

ஜிம்பாவேயில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 50 பேர் உயிரிழப்பு

ஹராரே : ஜிம்பாவேயில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிம்பாவே நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரோசெப்பி நகருக்கு அருகில் அங்கிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலையில் ரத்த வெள்ளத்துடன் சிதறி கிடந்தன. இதையடுத்து விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு பேருந்துகளுமே 166 கிமீ வேகத்தில் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜிம்பாவே நாட்டில் பொதுவாகவே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படும். இதனால்தான் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 43 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Zimbabwe , Zimbabwe, bus accident, death
× RELATED இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை மாதம் தொடக்கம்!