×

மெரினாவில் பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் திடீர் திருப்பம் : 2 பாலியல் அழகிகள் கைது

சென்ைன: மெரினாவில் மதுரை பெண் கொலை ெசய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 2 பாலியல் அழகிகளை போலீசார் கைது செய்தனர். வருவாய் குறைந்ததால் வாடிக்கையாளர்களை வைத்தே தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.மெரினா கடற்கரை நீச்சல் குளம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி (40) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி தண்டையார்பேட்டையை சேர்ந்த சந்தியா (19), ஷீலா பிரியா (26) ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் சந்தியா, ஷீலா பிரியா ஆகியோர் வாலிபர்களை மயக்கி பாலியல் தொழில் செய்து வருகின்றனர். இருவரின் வாடிக்கையாளர்களாக பிரேம்குமார் மற்றும் சூர்யா இருந்துள்ளனர். மதுரையில் இருந்து வந்து கலைச்செல்வி வழக்கமாக பாலியல் தொழில் ெசய்து வரும் சந்தியா மற்றும் ஷீலா பிரியாவுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தும் வகையில், இருவரின் வாடிக்கையாளர்களை தன் வயப்படுத்தினார். இதில் சந்தியா, ஷீலா பிரியாவின் வாடிக்கையாளர்களான ஆட்ேடா டிரைவர் பிரேம்குமார், சூர்யா ஆகிய இருவரும் கலைச்செல்வி பக்கம் சென்று விட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் சந்தியா, ஷீலா பிரியாவுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கலைச்செல்வியிடம் இருவரும் தகராறு செய்துள்ளனர். இதற்கிடையே கலைச்செல்வி ஆட்ேடா டிரைவர் பிரேம்குமார், சூர்யா ஆகியோரிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் மீண்டும் சந்தியா மற்றும் ஷீலா பிரியாவிடம் சென்றுள்ளனர். அப்போது இருவரிடமும் புதிதாக ஒரு பெண் வந்ததும் எங்களை விட்டு சென்றதால் நாங்கள் இனி உங்களை ஏற்க மட்டோம் என்று கூறியுள்ளனர்.ஒரு கட்டத்தில் உங்களை நாங்கள் ஏற்க வேண்டும் என்றால், எங்கள் தொழிலுக்கு போட்டியாக இருக்கும் கலைச்செல்வியை தீர்த்துக்கட்டினால் நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம் என்று இரு அழகிகளும் கூறியுள்ளனர்.

அதன்படிதான், கடந்த சனிக்கிழமை ஆட்டோ டிரைவர் பிரேம்குமார், சூர்யா ஆகிய இருவரும் நள்ளிரவில் கலைச்செல்வியை வழக்கத்தை விட அதிகளவில் பணத்தை தருகிறோம் என்று கூறி கடற்கரைக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் கலைச்செல்வியிடம், ‘‘இனி மெரினா கடற்கரைக்கு நீ வரக்கூடாது. அப்படி வந்தால் உன்னை அடித்து உதைப்போம் என்று கூறியுள்ளனர். அதை கேட்டு கலைச்செல்வி, ‘நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சந்தியா, ஷீலா பிரியா வந்து, தனது ஆண் நண்பர்களான ஆட்டோ டிரைவர் பிரேம்குமார், சூர்யா ஆகியோர் உதவியுடன் கழுத்தை நெரித்தும் முகத்தில் கடுமையாக தாக்கியும் கலைச்செல்வியை கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வெளியே கொண்டு செல்ல முடியாததால் கடற்கரை மணலிலேயே புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து நான்கு பேரும் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sexes ,Marina , Marina, 2 sexes arrested and murder case
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...