×

தீபாவளி பண்டிகையின்போது குவிந்த 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: கடந்த ஆண்டை விட 15 டன் அதிகம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில்  குவிந்த 95  டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் தினசரி கொட்டப்படும் குப்பை சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்ைம துறை மூலம் தினமும் சேகரிக்கப்படும். அதன்படி,  தினசரி மாநகராட்சி பகுதிகளில் 5,300 டன் குப்பை சேகரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படும். இதைத் தவிர்த்து பண்டிகை நாட்களில் குப்பை அகற்ற சிறப்பு பணிகளும்  மேற்கொள்ளப்படும். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பை அகற்றும் பணி கடந்த மூன்று நாட்களாக  நடந்து வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 19 ஆயிரம்  பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து 40 டாடா ஏஸ் வாகனம் மூலம் சிறப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

அதன்அடிப்படையில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 95.06  டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.  இந்த கழிவுகளில் வெடி மருத்து உள்ள 58.97 டன் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு அவை அனைத்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் கும்மிடிப்பூண்டி அருகில் அபாயகரமான கழிவுகளை  அகற்றும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து இன்றும் நடக்கிறது.கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 80 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த ஆண்டு அதை விட 15 டன் பட்டாசு கழிவுகள் கூடுதலாக அகற்றப்பட்டுள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Diwali , Conducted , Diwali festival, cracker waste
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...