×

3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்: உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

மீரட்: உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியின் வாயில் வாலிபர் ஒருவர் பட்டாசு வைத்து வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்துள்ளாள். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாகவும் மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் அவளது தந்தை புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shock incident ,Uttar , Uttar Pradesh, girl, mouth, crackers
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...