×

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் உறுதி செய்த ஹங்கேரி விஞ்ஞானிகள்!

புடாபெஸ்ட் : பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருக்கிறது என்ற வாதம் 1961ம் ஆண்டில் இருந்தே தொடங்கப்பட்டது. போலிஷ் வானியல் நிபுணர் காஸ்மிஜெர் கொர்டைல்ஸ் விஸ்கி என்பவர் முதன்முதலாக இதுகுறித்து ஆய்வுகள் நடத்தினார். அவரது கூற்றுப்படி மேகங்களில் கடினமான 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவை நிலவுபோல் பூமிக்கு நெருக்கமாக இருந்தாலும் வானியல் ஆராய்ச்சியாளர்களால் அதிகம் கவனிக்கப்படவில்லை. இந்நிலையில், பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர்.

அந்த இரு நிலவுகளும் தூசுக்கள் நிறைந்து காணப்படுவதாகவும், பூமியை சுமார் 250,000 மைல்கள் தொலைவில் சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும், ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் சூரியனின் பிரதிபலிப்பு காரணமாக இந்த தூசி மேகங்கள் தோன்றியதாகவும், அதிலிருந்து தனி துகள்களை பிரதிபலிக்கும் சிதறடிக்கப்பட்ட ஒளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கொர்டைல்ஸ் விஸ்கியின் பெயரை இந்த நிலவுகளுக்கு சூட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : scientists ,Hungary ,Earth , Earth,Two moons,Hungary scientists,Kortilles whiskey
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?