மும்பை: தனது தனிப்பட்ட போட்டடோக்கள் இன்டர்நெட்டில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும் என மும்பை போலீசில் புகார் அளித்துள்ள நடிகை அக்ஷரா, அடுத்தவர்களை கவுரவமாக வாழ விடுங்கள் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை அக்ஷரா ஹாசன், வீட்டில் இருக்கும் போது எடுத்த செல்பி படங்கள் இணையதளத்தில் கடந்த வாரம் கசிந்தது. அதில் அவர் உள்ளாடைகள் மட்டும் அணிந்திருந்தார். இதை பலர் இன்டர்நெட்டில் பகிர்ந்தது, அக்ஷரா மனதை மிகவும் பாதித்துள்ளது. இது பற்றி அவர் விடுத்துள்ள குறிப்பில், ‘‘மீ டூ இயக்கம் நாட்டை விழிப்படையச் செய்துள்ள நிலையில், இன்னும் சிலர் இது போன்று ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை பரப்பி மகிழ்வது வேதனை அளிக்கிறது.
எனது தனிப்பட்ட போட்டோக்களை லீக் செய்த நபரை கண்டுபிடிக்கும்படி மும்பை போலீஸ் சைபர் பிரிவில் புகார் தெரிவித்துள்ளேன். நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், ‘‘நாமும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்தவர்களை கவுரவமாக வாழ விடவேண்டும். இன்டர்நெட் உலகம் இது போல் என்னை தொந்தரவு செய்வதை தொடராது என நம்புகிறேன்’’ என மீ டூ ஹேஸ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி