×

பச்சை சேலை அணிந்து வந்த தெ.கொரியா அதிபர் மனைவி

அயோத்தி: இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக், சேலை அணிந்து தீபாவளி விழாவில் பங்கேற்றார். இந்தியாவுக்கு தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக் விருந்தினராக வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திக்கு சென்றார். அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சென்றார். அப்போது, சூக்கை அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், கிபி 48ம் ஆண்டில்  அயோத்தியில் இருந்து கொரியாவுக்கு சென்று கொரிய அரசரை திருமணம் செய்த அரசி ஹியோவின் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் சேலையை அணிந்திருந்தார். அது, பச்சை நிறத்தில் இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Choreographer ,Korea , South Korean Chancellor, Kim Jung Sook, Deepavali Festival
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...