×

பா.ஜனதா ஆட்சியில் நாடு மோசமடைந்து வருகிறது ஜெர்மனிக்கு ஹிட்லர் செய்ததை இந்தியாவுக்கு மோடி செய்கிறார் மல்லிகார்ஜூன் கார்கே கடும் தாக்கு

மும்பை: ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ அதையே மோடி இந்தியாவுக்கு செய்ய விரும்புகிறார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார். மும்பையில் நேற்றுமுன்தினம் இரவு ‘சன்விதான் பச்சாவ் பரிஷத்’ என்ற நிகழ்ச்சிக்கு மும்பை காங்கிரஸ் ஏற்பாடு ெசய்திருந்தது. மல்லிகார்ஜூன் கார்கே இதில் கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜனதா ஆட்சியில் நாடு மோசமடைந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மற்ற அமைப்புகளை அழித்தது போல அரசியலமைப்பு சட்டத்தையும் அழிக்க நினைக்கிறார்கள். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அரசியலமைப்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது வகுப்பினருக்கு சொந்தமானது அல்ல. அது ஒவ்வொரு இந்தியனுக்கும் சம அளவில் சொந்தமானது.

கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதாவால் சரியான திசையில் நான்கு அடிகள் கூட எடுத்து வைக்க முடியவில்லை. எனவே கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று காங்கிரசை பார்த்து கேள்வி எழுப்ப அவர்களுக்கு அருகதை கிடையாது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சு சுதந்திரம் அழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. ஹிட்லர் ஜெர்மனிக்கு எதை செய்தாரோ அதையை இந்தியாவுக்கு செய்ய மோடி விரும்புகிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜனதாவை எதிர்த்து போரிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கார்கே பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,BJP ,Modi ,mallikarjun karke ,Hitler ,India , country,deteriorating,BJP,rule,Modi,India,Hitler,mallikarjun karke
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...