×

தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப் வைத்து சேலம் - விருத்தாசலம் ரயிலை கவிழ்க்க சதி?

சேலம்: சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு பயணிகள் ரயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. கடலூர் மாவட்டம் முகாசாபரூர் ரயில் நிலையம் அருகே  தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த பெரிய கல்லை மோதியபடி ரயில் சென்றது. இதனால், ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்தது. இதனையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசாருக்கும்  தகவல் கொடுத்தார். இதனையடுத்து  ரயில்வே போலீசார்  விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தண்டவாளத்தில் சிமென்ட் கலவையிலான சிலாப்பை போட்டு வைத்திருந்தது தெரிந்தது. ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் யாராவது இதனை செய்துள்ளனரா?  அல்லது சிறுவர்கள் வைத்து சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், கூத்தக்குடி ரயில்வே தண்டவாளத்தில் இருந்த கிளிப்புகளை கழற்றி, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரயில்வே ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem - Ceylon Silappatham ,Salem - Vriddhachalam , track,cement cilap,Salem,Virudhachalam,train,plot,topple,
× RELATED சேலம் விருத்தாசலம் ரயில் சேவை...