சென்னை: உலகமெங்கும் உள்ள தினகரன் இணையதள வாசகர்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தீயசெயல்களைப் போக்கி நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாக கொண்ட தீபஒளி திருநாளை அனைவரும் பாதுகாப்பாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழ உங்கள் தினகரன் இணையதளம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது. தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:கவர்னர் பன்வாரிலால் புரோகித்: தீபாவளி பண்டிகை நம்முடைய நம்மை சுற்றியுள்ள அனைவரது வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டுவர முற்போடுவோம்.முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி: அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும். அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர்): உங்கள் குடும்பங்களில் செல்வம் செழித்து, மகிழ்ச்சி பொங்கி வருகின்ற காலங்களில் குதூகலமான ஒரு குடும்பமாக உங்கள் குடும்பம் விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
திருநாவுக்கரசர்(தமிழக காங்கிரஸ் தலைவர்): மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளி வீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ராமதாஸ்(பாமக நிறுவனர்): அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற. அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): புது விளக்கு ஏற்றி, புத்தாடை புனைந்து, பட்டாசு வெடித்து, பல்சுவை உணவு உண்டு இன்று மகிழ்வது போல் என்றும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தொடர வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
விஜயகாந்த்(தேமுதிக நிறுவனத்தலைவர்): அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்றும் தேமுதிக சார்பில் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தமிழிசை சவுந்தரராஜன்(தமிழக பாஜ தலைவர்): பட்டாசுக்கு பயந்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற நிலைமாறி, பயந்து பயந்து பட்டாசு வெடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மாற வேண்டும். அனைவரின் வாழ்வும் செழிக்க வேண்டும்.
அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): தீப ஒளித் திருநாளின் போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும்.
டி.டி.வி.தினகரன்(அமமுக துணை பொது செயலாளர்): இன்று மகிழ்வது போல் என்றும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தொடர வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தமிமுன் அன்சாரி(மஜக ெபாது செயலாளர்): அன்பும், ஒற்றுமையும், சகிப்புத்தன்மையுமிக்க நமது தேசத்தை, ஒரு தாய் மக்களாய் இணைத்து நின்று வழி நடத்த உறுதியேற்போம். உங்கள் அனைவரின் வாழ்விலும் வளம் பொங்கிட வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், இந்திய ஹஜ் அசோசியேஷயன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் எச்.வசந்தகுமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன், அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் வி.திவாகரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் எம்ஜிஆர் நம்பி, அகில இந்திய ஜனநாயக மக்கள் நல பேரவையின் நிறுவன தலைவர் ஆ.ஹென்றி, திராவிட சங்கிலி இயக்க நிறுவனர் செங்கை பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்களும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி