×

இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டியவர் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் கற்பகாநகர், 3வது தெருவில் தனியார்  கன்சல்டிங் நிறுவனத்தை ராஜாசுந்தர் கார்த்திக் ராஜா (36) என்பவர் நடத்தி வந்தார். இதில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதும், நிறுவனங்களில் வேலை செய்ய பயிற்சியும் அளிக்கபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சியை சேர்ந்த சாந்தி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பி.இ.பட்டதாரி பெண் பயிற்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு அந்த பெண்ணுக்கு கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்த ராஜாசுந்தர் அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி ₹1 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து,  பாதிக்கபட்ட பெண் சேலையூர் போலீசில் புகார் செய்தார். சேலையூர் போலீசார் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ராஜாசுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Detainee , young girl,filming,threatened,man,arrested
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...