×

இன்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற சப்தகிரி ரயில்: பயணிகள் ஒருமணி நேரம் அவதி

சென்னை: ெசன்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் திடீரென பழுதானதால் நடுவழியில் ஒரு மணி நேரம் நின்றது. இதனால், பயணிகள்  அவதிப்பட்டனர் .சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு  புறப்பட்டது. அது காலை 7.30 மணியளவில் செஞ்சி பானம்பாக்கம் - மணவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது திடீரென நின்றது. தொடர்ந்து இன்ஜின் பழுதானது குறித்து சென்னை சென்ட்ரல்  மற்றும் அரக்கோணம் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சப்தகிரி ரயிலின் டிரைவரே காலை 8.30 மணிக்கு பழுதை சீர் செய்தார். தொடர்ந்து அங்கிருந்து  திருப்பதிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், ரயில் பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதிப்பட்டனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : downpour ,passengers , The engine ,Sapthigiri railway,middle, passengers end up at one time
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து