×

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பயங்கரம்... பைக்கில் சென்ற வியாபாரி சுட்டுக்கொலை

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வியாபாரியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூரில் காமல் பவர் டூல் என்ற பெயரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் மகேந்திர சிங். இவர் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டிற்கு சென்ற போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பட்டேகான் பேட்டை என்ற இடத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மகேந்திர சிங் கீழே விழுந்து துடித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை மீட்டு நீல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேந்திர சிங் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

ஆந்திராவில் கொலை கொள்ளைக்கு கத்தி அறிவால் போன்ற ஆயுதங்களையே கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் தலை துக்கியுள்ளது. இதனிடையே மகேந்திர சிங்கை சுட்டு கொன்றவர் பிடிக்க ரெட் அலார்ட் பிறப்பித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nellore ,Andhra Pradesh , Nellore, Andhra Pradesh, businessman, shotgun
× RELATED லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!