×

மணவாளக்குறிச்சி அருகே போலீஸ் பிடித்து சென்ற மீனவர் திடீர் சாவு

குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே போலீஸ் பிடித்து சென்ற சமயத்தில் மயங்கி விழுந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் 4 அரசு பஸ்களை சிறை பிடித்தனர்.
குமரி மாவட்டம் திருநயினார்குறிச்சியில் வசித்தவர் சகாயராஜ் (50). மீனவர். இவர், நேற்று மாலை தென்னந்தோப்பில் நண்பர்கள் சிலருடன் அமர்ந்து மது அருந்தி ெகாண்டு இருந்ததார்.
இதுகுறித்து கிராமமக்கள், மணவாளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் சென்று சகாயராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை ஜீப்பில் ஏற்றி உள்ளனர். அந்த சமயத்தில் சகாயராஜை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சகாயராஜ் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சகாயராஜ் இறந்தார். இதையறிந்த கிராமமக்கள், ஆலய வளாகத்தில் திரண்டு, `சகாயராஜை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி கோஷம் எழுப்பினர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fisherman ,Manavalakurichi , Colachel, Fisherman's sudden death, fainting
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...