×

முன்னாடி வந்தா, பின்னாடி வித்துக்கோ...!

ஈரோட்டில் டாஸ்மாக் பார்களில், அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட, மீதி நேரங்களிலும் சட்ட விரோத மதுபானம் விற்பனை தொடர்கிறது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதையடுத்து,  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீரென ரெய்டு நடத்தினார். சட்ட விரோதமாக மது விற்பனை செய்யக்கூடாது, மீறினால் நடவடிக்கை பாயும்...  என அங்கிருந்த ஊழியர்களை எச்சரிக்கை செய்துவிட்டு வந்தார். அத்துடன், பணியில் அலட்சியமாக இருந்தார் எனக்கூறி அப்பகுதி ஸ்பெஷல் பிராஞ்ச் ஏட்டுவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால், அடுத்த சில மணி  நேரத்தில் மீண்டும் சட்ட விரோத மது விற்பனை துவங்கியது. காரணம், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், இச்சட்ட விரோத மது விற்பனைக்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். ‘எங்களுக்கு கொடுக்கிறத கரெக்டா கொடுத்துட்டு, நீ  பாட்டுல வித்துக்கிட்டே இரு... ஐயா, முன்னாடி வந்தா, நீ பின்னாடி வித்துக்கோ...’ என இங்குள்ள டிஎஸ்பி., இன்ஸ்., உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டனர். அதனால், எஸ்.பி.யால் ஒன்றும் செய்ய  முடியல... இந்த விவகாரத்தில், கடுப்பில் உள்ள எஸ்.பி., தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் மீது ஏதேனும் புகார் வந்தால் விசாரணையே இல்லாமல் பந்தாடிவிடுகிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sidewalk , Come forward, sidewalk ...!
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்