சென்னை: பி.எஸ்.என்.எல் சென்னை தொலைதொடர்பு வெளியிடப்பட்ட அறிவிப்பு:வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் வகையில் தீபாவளி தினத்தன்றும் அதற்கு முன்பான விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் திறந்தே இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சேவை மையத்தை அனுகலாம். இதேபோல், தீபாவளி, புதுவருடப்பிறப்பு போன்ற தினங்களில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது அதற்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.ஆனால், இந்த வருடம் வாடிக்கையாளர்கள் தீபாவளி தினத்தன்று அனுப்பும் எஸ்.எம்.எஸ்க்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படாது. இதேபோல், வாடிக்கையாளர்கள் ₹1,699 மற்றும் ₹2099 வருடாந்திர சேவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, தீபாவளி தினத்தன்று வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற்று பயன்பெறலாம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி