×

ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணி சடலமாக மீட்பு

பாட்னா: ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 33 வயது நபர் பீகார் மாநிலம் புத்த கயாவில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார். இந்நிலையில் இங்குள்ள புத்த கயா பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் இன்று புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் ஹீத் அல்லென் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். இந்த கடிதத்தில் தனது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது சகோதரிக்கு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tourist traveler ,Australia ,India , Australia, India, tourist resort, corpse recovery
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1