வாஷிங்டன்: : அமெரிக்காவில் புளோரிடாவில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்தார். அப்போது திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 27 ம்தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். யூத மக்களின் ஜெபக்கூடம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்து குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி