×

சஹாரா நிறுவனம் ரூ.14,000 கோடியை 15% வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க செபி உத்தரவு

மும்பை : சஹாரா நிறுவனம் ரூ.14,000 கோடியை 15% வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்குமாறு செபி உத்தரவிட்டுள்ளது. பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பு கடந்த 1998 முதல் 2009ம் ஆண்டு வரை சஹாரா நிறுவனம் 3 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு பங்கு பத்திரம் மூலம் திரட்டிய ரூ.14000 கோடி ரூபாயை திருப்பி அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணத்தை ஆண்டுக்கு 15% வட்டியுடன் அளிக்க வேண்டும் என்றும் வங்கி வரைவு காசோலை மூலமாக இந்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. பணத்தை திருப்பி அளிக்கும் வரை சஹாரா நிறுவனத்தின் தலைவர் Subrata Roy மற்றும் இயக்குனர்கள் வேறு நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கவும் செபி தடை விதித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SAHAI , SAHARA has been directed to pay Rs 14,000 crore with 15% interest
× RELATED 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று திறப்பு