ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்பட 100பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பேனர்கள் கிழித்ததாக தினகரன் கட்சியினர் மீது கமுதி போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேனர் விவகாரத்தில் அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் கடந்த 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்நதவர்கள் பேனர்களை சேதப்படுத்தியதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பேனர்களை சேதப்படுத்தியதாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர். பல்வேறு ஊர்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துளளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி