×

அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல் : மேற்குவங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் 5 பேர் கொலை

அசாம்: அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தோலா மாவட்டத்தில் உள்ள கட்பாரி கிராமத்தை சேர்ந்த 6 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரின் உடல்கள் குண்டு, காயங்களுடன் பாலம் ஒன்றின் கீழே இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சார்ந்த பிரச்சினையே இவர்கள் கொல்லப்பட காரணம் என்று அவர் கூறியுள்ளார். கொல்லப்பட்ட 5 பேரின் பெயர்களையும் மம்தா வெளியிட்டுள்ளார். கொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று அவர் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனாவாலும் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,ULFA ,civilians ,Assam ,West Bengal , Assam, ULFA militants, firing squad, West Bengal, Mamata Banerjee
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி