சென்னை: பொதுதேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விரும்புவதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருநாவுக்கரசர், காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலிடனுடன் பேசி இறுதி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி