×

கும்பகோணத்தில் தனியார் ஜவுளிக்கடையில் 3 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 3 நாட்களாக தனியார் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை நிறைவடைந்துள்ளது. 3 கிளைகளுடன் செயல்படும் அந்த தனியார் ஜவுளிக் கடையில் கடந்த 29-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கடைக்கு தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி எடுக்க கடைக்கு வந்த பொதுமக்களை வெளியேற்றி, கடந்த 29-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை 4 மணிக்கு வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income Tax Department ,Kumbakonam , Kumbakonam, Private School, Income Tax Department, Income Tax Department
× RELATED முல்லை பெரியாறில் புதிய அணை...