மாஸ்கோ: ரஷ்யாவில் பாதுகாப்பு அமைப்பு நுழைவு வாயிலில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவில் அக்ஹன்கெல்ஸ்க் நகரில், நாட்டின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான எப்எஸ்பி.யின் அலுவலகம் அமைந்துள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் உலகளவில் புகழ் பெற்று விளங்கிய இந்நாட்டின் உளவு அமைப்பான கேஜிபி.க்கு அடுத்தப்படியாக உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை எப்எஸ்பி கவனித்து வருகிறது. இதன் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென குண்டு வெடித்தது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி