×

கிராமபோன் போல் ஒரே கீறல் ராகுல் பற்றி மோடி கிண்டல்

புதுடெல்லி: ‘‘கிராமபோன் ஒரு இடத்தில் சிக்கி தொடர்ந்து கீறல் சத்தம் எழுப்புவது போல் ராகுல் தொடர்ந்து சிறுபிள்ளைத்தனமாக பொய்களை திரும்ப, திரும்ப கூறி வருகிறார்’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது மொபைல் ஆப் மூலம் பாஜ தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அதில் ஒரு தொண்டர், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பிரசாரத்தில் உங்கள் பகுதிக்கு செல்போன் தொழிற்சாலை வர இருந்ததை பாஜ தடுத்துவிட்டது என்று குற்றஞ்சாட்டி வருகிறாரே, அவருக்கு என்ன பதில் சொல்வது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘‘முந்தைய காலங்களில் நம் வீடுகளில் கிராமபோன் என்று ஒரு கருவி இருக்கும். அது சில நேரங்களில் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டால் தொடர்ந்து கீறல் சத்தத்தை எழுப்பும். அதுபோன்றவர்கள்தான் இவர்கள். பொய்யை திரும்ப, திரும்ப கூறி வருவார்கள்.

இவர்களை எல்லாம் கண்டுக்கொள்ள வேண்டியதில்லை. இந்த நவீன காலத்தில் மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை மறந்து விட்டவர்கள்.
நான் ஆட்சிக்கு வந்த பின்னரா செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்திலேயே அதை தொடங்காதது ஏன்?’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் சசிதரூர், மோடியை பற்றி கடுமை விமர்சித்துள்ளார். ‘சிவன் சிலையின் தலையில் இருக்கும் தேள் போன்றவர் மோடி. அதை கைகளாலும் அகற்ற முடியாது; செருப்பினாலும் தள்ளிவிட முடியாது’ என்று கூறியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மோடி, ‘அவர்களிடத்தில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு படைக்கிறார்கள். அவர்கள் மாலை நேரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க எந்த வகையிலாவது நான் பயனுள்ளவனாக இருப்பேன் என்றால், அது எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Rahul ,villain , The gramophone, the only scratch, Rahul, Modi, teasing
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...