×

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குழந்தை பெற்றாலும் இனி குடியுரிமை கிடைக்காது: டிரம்ப் அதிரடி திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அகதிகள் குழந்தை பெற்றதை காரணம் காட்டி குடியுரிமை பெறும் முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு முக்கிய வேலைகளில் வெளிநாட்டவர் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் சில காலம் அங்கு வசித்த பிறகு குடியுரிமை கோரி பெறுகின்றனர்.  சிலர், குறுக்கு வழியை கையாள்கின்றனர். அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் தாங்கள் குடியுரிமை பெறாவிட்டாலும் கூட, அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அதை சாக்காக வைத்து அவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்ட விதிகள்தான் இதை அனுமதிக்கின்றன. இதன்படி, எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் குழந்தை பெற்றால் உடனே அமெரிக்க குடியுரிமை சான்று தானாக கிடைத்துவிடும்.

  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். டிரம்ப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்,  ‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குழந்தை பெற்று குடியுரிமை பெறுவது உலகத்திலேயே இந்த நாட்டில்தான் உள்ளது. இது கேலிக்கூத்தான விஷயம். இதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். வேலை, சுற்றுலா மற்றும் விருந்தினர் விசாவில் சென்று, அமெரிக்காவில் குழந்தை பெற்று குடியுரிமை வாங்கி விடுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் இவ்வாறு பலன் பெற்றுள்ளனர். இனி இது எடுபடாது. இந்த நடைமுறைக்கு அமெரிக்க அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : foreigner ,United States , America, Citizenship, Trump
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!