×

துப்புரவு பணிகள் தனியார்மயம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த ஆகஸ்ட்  26ம் தேதி ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த 11ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டனர்.  

இதையடுத்து, பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்அடிப்படையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை  தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cleaning work, corporation
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...