×

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் விவகாரம் அப்பீலா, இடைத்தேர்தலா? டிடிவி.தினகரன் இன்று முடிவு

மதுரை: 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் கடந்த 26ம் தேதி மதுரையில் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார். இதில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மற்றும் இடைத்தேர்தலை சந்திப்பது என 2 முடிவுகள் விவாதிக்கப்பட்டன. இதன் பிறகு அப்பீல் செய்தால் தாமதம் ஏற்படுமா என்பதை அறிந்து வர வழக்கறிஞர் ஒருவர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இடைத்தேர்தலுக்கு எந்த வகையிலும் இடையூறு இல்லாமல் அப்பீல் செய்வோம். இதுதொடர்பாக 18 பேரிடமும் அக். 31ம் தேதி (இன்று) மதுரையில் மீண்டும் ஆலோசனை நடத்துவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்து இருந்தார். அதன்படி 18 பேருடன், டி.டி.வி.தினகரன்  இன்று மதுரையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அப்பீலா, இடைத்தேர்தலா என்பது குறித்து டிடிவி.தினகரன் இன்று முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : affair ,Dt.Dinakaran , Eligibility MLAs, Apply, Intermediate, DT.Dinakaran
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...