×

சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் கடத்தப்பட்ட சிறுவன் சில மணி நேரத்தில் மீட்பு

சென்னை: சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் பள்ளிக்கு சென்ற சிறுவன் கடத்தப்பட்ட நிலையில் போலீசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் சில மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். சென்னை பட்டாளம் பிரகாஷ்-துர்கா தம்பதியினர் மகன் அஜய், பிரகாஷ் மின் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்கேஜி படித்துவரும் சிறுவன் அஜயை உறவினர்கள் எனக்கூறி இரண்டு பெண்கள் அழைத்து சென்றுள்ளனர். பின்பு குழந்தையை அழைத்து செல்ல வந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரிள் புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமரா காட்சி மூலம் ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை கடத்தப்பட்ட பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே வியாசர்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் மாயமான 3 வயது குழந்தை சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தையை கடத்தியதும் இதே பெண்கள் தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kid ,area ,Chennai , Chennai, Puliyanthope area, boy, rescue
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி