சென்னை0: புளியந்தோப்பு, போகி பாலையம், தண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ்(4) அங்குள்ள மாநகராட்சி உருது பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத 2 பெண்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம், திணேஷின் அத்தை என்று கூறி, சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். திணேஷை அழைத்துச் செல்ல பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளனர். ஆசிரியர் அவர்களிடம் அத்தையோடு திணேஷ் சென்றுவிட்டான் எனக் கூறினார். குழப்பம் அடைந்த பெற்றோர், வீட்டுக்குச் சென்று பார்த்ததில், அங்கு திணேஷ் இல்லை. கவலையும், சோகமும் அடைந்த பெற்றோர், திணேஷ் கடத்தப்பட்டு உள்ளான் என புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறுவனை அழைத்துச் சென்ற இளம் பெண்கள் யார்? என்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி