×

வியாசர்பாடியில் ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : 3 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் இரு ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு சரமாரி வெட்டி விழுந்தது. இதுதொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஆறாச்சி (எ) சதீஷ்குமார் (22). பிரபல ரவுடி. இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி காவல்நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து வந்தபோது எதிரே ஏ.கல்யாணபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (32) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், ஆறாய்ச்சிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் முருகன் (25), ஆகாஷ் (24), மணி (26) ஆகியோர் சம்பவ இடத்திற்கு அரிவாளுடன் விரைந்து வந்தனர். யோகேசுக்கு ஆதரவாக பெருமாளும் அரிவாளுடன் வந்தார். இதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொண்டனர்.

இதில் ஆறாய்ச்சிக்கு தலை, மூக்கு, கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. யோகேஸ்வரனுக்கு மண்டையில் வெட்டு விழுந்தது. தகவலறிந்ததும் வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்ஐ பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெட்டுப்பட்ட ஆறாய்ச்சியை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். யோகேஸ்வரனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர், ஆறாய்ச்சி கொடுத்த புகாரின் பேரில் யோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். யோகேஸ்வரனும் அளித்த புகாரின்பேரில்  எதிர் கோஷ்டியை சேர்ந்த முருகன், ஆகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பெருமாள், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : volunteers ,Vyasarpadi , Vyasarpadi, Rowdy, conflict, sickle cut, arrest
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...