×

டெல்லியில் மீண்டும் 2 நாள் போராட்டம்: அய்யாக்கண்ணு ஆலோசனை

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில உயர்மட்ட குழு கூட்டம் திருச்சி அண்ணாமலைநகரில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி கோரி வரும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொள்ளும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை அழைத்து செல்வது சம்பந்தமாக திருச்சியில் வருகிற 1ம் தேதி நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நவம்பர் 30ம் தேதி மாலை டெல்லியில் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi , Delhi, 2 days struggle, Ayyakannu counseling
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...