×

மேட்டுப்பாளையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 30 வயதான பிரவீன் தாஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் ராணுவவீரரின் மகனான இவர் மீது சங்கிலிபறிப்பு, மிரட்டி பணம்பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் காலையில் வீட்டிலிருந்து வெளியில் புறப்பட்ட அவரை மகாலட்சுமி கோயில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தப்பியோட முயன்ற அவரை துரத்திய அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாக்கடை குழியில் தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டது.

வெட்டுப்பட்ட பிரவீன் அதே இடத்தில உயிரிழந்தார். இருசக்கர வாகனங்களில் தப்பியோடிய கொலையாளிகளை பெரியநாயக்கன்பாளையம் போலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமான  ரவுடியாக வளம் வந்த பிரவீன் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killing ,Rowdy Vettik ,Mettupalayam ,murders ,Police personnel , Popular,Rowdy,killied,Mettupalayam,police,personnel,murders
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது