×

திருக்குறள் ஒப்புவித்த 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் `திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு’ எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்தல் செய்யும் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு  அவர்களுக்கு குறள் பரிசாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டிற்கு 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, குறள் முற்றோதல் பரிசு ஒட்டுமொத்த தொகையாக ஒவ்வொரு மாணவருக்கும் 10,000 ரூபாய் வீதம்,  மொத்தம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirukkural ,Chief Minister ,Edappadi , Thirukkural,,reconciled,10 thousand for 70 students,Chief Minister Edappadi
× RELATED திருக்குறளில் வேள்வி!