சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி பசும்பொன் நினைவிடத்தில் 30ம் தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளான அக்டோபர் 30ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி வருகிற 30ம் தேதி (நாளை மறுதினம்) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 111-வது பிறந்த நாள் மற்றும் 56வது குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காலை 8.30 மணியளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெறும் விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்தை திறந்துவைக்கிறார். 30ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி