×

2 கோடியில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா: ஒரு மாதத்தில் பணிகள் முடியும்

சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுதி திறனாளிகளுக்கான சிறப்பு பூங்காவும், போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து  பூங்காவும் அமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரூ.2 கோடி செலவில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றை மாநகராட்சி அமைத்துவருகிறது. தமி்்ழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த நிதியைக் கொண்டு இந்தப்  பூங்காவை மாநகராட்சி அமைத்துவருகிறது.இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை தண்டையார் பேட்ைட மண்டலத்தில் உள்ள சிபி சாலையில் ரூ.2 கோடி செலவில்  அம்மா சுற்றுச்சூழல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பூங்காவில் மூலிகை தோட்டம், கிராணைட் நடைபாதை, திறந்த  வெளி அரங்கம், நீர்வீழ்–்ச்சி மற்றும் பயோ கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன. மூலிகை தோட்டத்தில் பல்வேறு விதமான மூலிகைகளும் செடிகளும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் அவற்றின் மருத்துவ  குணங்களை அறிய முடியும்.

இயற்கை சுழல் தொடர்பாகவும், மூலிகைகள் தொடர்பாகவும் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும். இதற்காக குழந்தைகள் பூங்கா தனியாக அமைக்கப்படவுள்ளது. இதில் பல்வேறு வகையான விளையாட்டு வசதிகளும்  ஏற்படுத்தப்படும். இதைத் தவிர்த்து இந்தப்  பூங்காவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு ெடண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையம் அமைக்கப்பட்டால் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில்  இருந்த நீரை எடுத்து சுத்துகரிப்பு செய்து பூங்கா தேவைக்கும் பயன்படுத்தலாம்.
இதேப் போன்ற  நிலையங்கள் நடேசன் பூங்கா,ஜீவா பூங்கா, சிஐடி நகர் பூங்கா, கோடம்பாக்கம் பூங்கா உள்ளிட்ட 4 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்கா கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மூலிகை பூங்கா,  பல்வேறு செடிகள் நடும்  பணி மற்றும்  சுற்றுச்சூல் ெதாடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் முடிவடையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mommy ,Eco Park , Mommy's Eco,Park in 2 Crores,Functions, month
× RELATED மாமல்லபுரத்தில் உள்ள கோனேரி ஏரியில்...