×

மூதாட்டிக்கு பன்றி காய்ச்சல் உறுதி : திருவொற்றியூர் மக்கள் பீதி

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மஸ்தான் கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி (73). இவரது கணவர் லோகநாதன், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். திரும்பி வரவில்லை. இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கிறார்கள். 3வது மகன் வீட்டில் ராணி வசிக்கிறார். கடந்த வாரம் ராணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து ராணி, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ராணிக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது. உடனே, ஆம்புலன்ஸ் மூலம், ராணியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூதாட்டிக்கு, பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், திருவொற்றியூர் பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Martha ,panic ,Thiruvottiyur , swine flu confirmed, People , Thiruvottiyur panic
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...